கந்தர்சஷ்டி கவசங்கள் - ஆறு முழுதுமாக...
குறள் வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் , துன்பம் போம் , நெஞ்சில் பதிப்போர்க்குக் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும் , நிஷ்டையுங் கைகூடும் , நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை . காப்பு அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி . நூல் 1 திருப்பரங்குன்றம் திருப்பருங்குன்றுரை தீரனே குகனே மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா குறுக்குத்துறையுறை குமரனே அரனே இருக்கும் குருபரா ஏரகப்பொருளே ... ... 4 வையாபுரியில் மகிழ்ந்து வாழ்பவனே ஒய்யார மயில் மீது உகந்தாய் நமோ நமோ ஐயா குமரா அருளே நமோ நமோ மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ ... ... 8 பழநியங்கிரிவாழ் பகவா நமோ நமோ மழுவுடை முதல்வன் மதலாய் நமோ நமோ விராலிமலையுறை விமலா நமோ நமோ மராமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ ...