புதன் சார்ந்த குற்றங்கள்
புதன் சார்ந்த குற்றம் – 1.தாய்வழி உறவு 2.தந்தைவழி உறவு Ø எழுதி ஏமாற்றியது Ø பிள்ளைப் பிறப்பைத் தடுப்பது Ø கருக்கலைப்பு செய்தல் Ø மற்ற பிள்ளைகளின் கல்வியைத் தடுப்பது (பிற தாரத்தின் பிள்ளைகள்) இதன் காரணமாக புதன் குற்றம் ஏற்பட்டு, ஊமை, படிப்பறிவற்ற, ஆண்மையற்ற, ஊனமான குழந்தைகள் பிறத்தல் ஏற்படும். ஒரு குழந்தை பிறக்கும்போது பிரம்மா, சனியின் ஆலோசனைகளைக் கேட்டு அதன்பேரில், தாய், தந்தை குற்றம் காரணமாக மேற்காணும் வகையில் குழந்தை பிறப்பை நிர்ணயம் செய்வார். எழுதி ஏமாற்றியவரின் குழந்தைகள் எல்லா வேலைகளையும் ஒரே கையால் செய்யும் நிலைக்கு ஆளாவர். கன்னியில் புதன் – குறைவான படிப்புள்ள நபர்கள் பெரிய முதலாளிகளாக இருப்பர். நிறைய படித்தவர்கள் இவர்களிடம் வேலைக்காரர்களாக இருப்பர். சிவன் சொத்து குலநாசம் – சிவன் போல பல குடும்பங்களை வாழவைக்கக் கூடியவர்களின் சொத்துக்களை அபகரிப்பவர்கள் நாசமாவர். இம்மாதிரியான முதலாளிகள் கொங்கு மண்டலத்தில் நிறைய பேர்...