இடுகைகள்

சித்தர் வழிபாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மகான் ஶ்ரீகோரக்கர் சித்தர் யார்?

படம்
குருவே சரணம் ! ஓம் நமசிவய ! ஓம் சிவயநம ! மகான் ஶ்ரீகோரக்க சித்தர் யார்? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் சித்தர் வழிபாட்டில் புதிதாக இணைபவர்களுக்கு தோன்றும். நியாயமே ! காரணம், நாம் பயிலும் பாடபுத்தகங்களிலோ அல்லது தினசரிகளிலோ தமிழ்தேசத்தின் அல்லது இந்திய தேசத்தின் வரலாற்றுப் பக்கங்களில் பெருமைமிக்க சித்தபுருஷர்களின் அற்புதங்கள், சேவைகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் தரப்பட்டிருக்குமேயானால், நிச்சயம் எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், ஆங்கிலேயர்கள், இஸ்லாமியர்கள் என பல்வேறு தரப்பட்ட வெளிநாட்டு சக்திகளால் இந்த தேசம் ஆட்சி செய்யப்பட்ட காரணங்களால் கோடிக்கணக்கான வரலாற்றுப் பதிவுகள் நமக்கு கிடைக்காமலே போய்விட்டது. இருப்பினும், காலச்சக்கரம், அறிவியல் கண்டுபிடிப்புகளின் வழியே இறைவனின் அனுகிரகத்தால் நம் கண்களில் பட்டு, நம் அறிவை எட்டிவிடும் வாய்ப்பை நாம் பெற்றுள்ளோம். அந்த வகையில், இந்திய தேசம், குறிப்பாக, பாரத தேசம் கடந்தும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அன்று முதல் இன்று வரை சித்தர்கள் தோன்றி, மானுட சமூகங்களுக்கு பலப்பல நன்மைகளை செய்துவருகின்றனர். அப்படியாக, நமது பாரத தே...

அகத்தியர் மந்திர வாள்

  அகத்தியர் மந்திர வாள் என்னும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் அருளிச்செய்த   அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள் :   " வசி - வசி " யென்று நிதஞ் செபித்தாயானால் மகத்தான சகல பாக்கியமு முண்டாம் " நசி - நசி " யென்று நிதஞ் செபித்தாயாகில் நலமெல்லாம் சூழும் , வினைகள் நாடா நிற்கும் " மசி - மசி " யென்று தினமும் செபித்தாயானால் மகத்தான விஷம் முதலான ரோகந்தீரும் " கசி - கசி " யென்று நிதந் செபித்தாயானால் கனத் தெழுந்த சிலந்தி புண்கள் கரைந்துபோம் " அங்கிலி - சவ் - சிசி " யென்ன பொல்லாத மிருகமெல்லாம் ஓடிப் போகும் " அய்யுஞ் - சவ்வும் - கிலிவா " வென்ன அடங்கா மிருக மெல்லாம் அடங்கி நிற்கும் " " கிலி - அங்சவ் - ரங்ரங் " என்று கூற பட்சி யெல்லாம் ஒடுங்கி நிற்கும்,   என்று மந்திரங்கள் வசமாகும் விஷயங்களை அகத்தியர் பெருமான் தனது மந்திர வாள் நூலில் சொல்கிறார் .   (1) " நசி , மசி " என்றிட எமனையும் வெல்லலாம் .   (2...