இடுகைகள்

திருமுறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேவாரம் - மந்திரமாவது நீறு..

  உ 02.066 மந்திர மாவது நீறு   அ௫ளியவர் : திருஞானசம்பந்தர், இரண்டாம் திருமுறை; பண் : காந்தாரம்   நாடு : பாண்டியநாடு; தலம் : ஆலவாய் (மதுரை) சிறப்பு: திருநீற்றுப்பதிகம் மந்திர மாவது நீறு   வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு   துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு   சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன்   திருஆல வாயான் திருநீறே .  1   வேதத்தி லுள்ளது நீறு   வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு   புன்மை தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு   உண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த   திருஆல வாயான் திருநீறே .  2   முத்தி தருவது நீறு   முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு   தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு   பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு   திருஆல வாயான் திருநீறே .  3   காண இனியது நீறு   கவினைத் தருவது நீறு பேணி அணிபவர்க் கெல்லாம்   பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு   மதியைத் தர...

தேவாரம் - இடரினுந் தளரினும்

  திருச்சிற்றம்பலம் இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே   இதுவோஎமை யாளுமா      றீவதொன் றெமக்கில்லையேல்   அதுவோவுன தின்னருள்      ஆவடு துறையரனே.   1 வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேனல்லேன் தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே   இதுவோஎமை யாளுமா      றீவதொன் றெமக்கில்லையேல்   அதுவோவுன தின்னருள்      ஆவடு துறையரனே.   2 நனவினுங் கனவினும் நம்பாவுன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான் புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனலெரி யனல்புல்கு கையவனே   இதுவோஎமை யாளுமா      றீவதொன் றெமக்கில்லையேல்   அதுவோவுன தின்னருள்      ஆவடு துறையரனே.   3 தும்மலோ டருந்துயர் தோன்றிடினும் அம்மல ரடியலால் அரற்றாதென்நாக் கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மு...