இடுகைகள்

சுந்தரர் தேவாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தானெனை முன்படைத்தான்... சுந்தரர் தேவாரம்

படம்
  அ௫ளியவர் :   சுந்தரர்    திருமுறை : ஏழாம் - திருமுறை   பண் : பஞ்சமம்    நாடு : வடநாடு           தலம் :   கயிலாயம் ( நொடித்தான்மலை ) சுவாமி : கைலாயநாதர் ; அம்பாள் கைலாயநாயகியம்மை .     தானெனை முன்படைத் தானத   றிந்துதன் பொன்னடிக்கே நானென பாடலந் தோநாயி   னேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ளமத்த   யானை அருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய் தான்நொடித்   தான்மலை உத்தமனே .   1    ஆனை உரித்த பகைஅடி   யேனொடு மீளக்கொலோ ஊனை உயிர்வெருட் டிஒள்ளி   யானை நினைந்திருந்தேன் வானை மதித்தம ரர்வலஞ்   செய்தெனை ஏறவைக்க ஆனை அருள்புரிந் தான்நொடித்   தான்மலை உத்தமனே .   2    மந்திரம் ஒன்றறி யேன்மனை   வாழ்க்கை மகிழ்ந்தடியேன் சுந்தர வேடங்க ளாற்றுரி சேசெயுந்   தொண்டனெனை அந்தர மால்விசும் பில்அழ   கானை அருள்புரிந்த துந்தர மோநெஞ்ச மேநொடித் ...