தேவாரம் - வேயுறு தோளி பங்கன்...
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை பண்; பியந்தை காந்தாரம் வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே . 1 என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே . 2 உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் ...