ஶ்ரீ சித்ரகுப்தன் போற்றிகள்
ஓம் கமலவர்ணனே போற்றி ஓம் சித்திரை உருவே போற்றி ஓம் பயம் போக்குபவனே போற்றி ஓம் கால உருவே போற்றி ஓம் அந்தக நண்பனே போற்றி ஓம் ஞான உருவே போற்றி ஓம் கருணாகரனே போற்றி ஓம் கணக்கனே போற்றி ஓம் தர்மராஜனே போற்றி ஓம் தேவலோக வாசனே போற்றி ஓம் ஆயுள் காரணனே போற்றி ஓம் மேன்மை தருபவனே போற்றி ஓம் குழந்தை வடிவினனே போற்றி ஓம் குளிகன் உருவினனே போற்றி ஓம் புண்ணிய தோற்றமுடையாய் போற்றி ஓம் சித்திரகுப்தனே போற்றி பலன்கள் பவுர்ணமி தினத்தன்று அதிகாலை முதல் நள்ளிரவு வரையான காலத்தில் மேற்கூறிய இந்த ஸ்லோகத்தை எத்தனை முறை துதித்து வந்தாலும் துதிப்பவர்களுக்கு நீண்ட ஆயுள் , அன்பான வாழ்க்கை துணை , நன்மக்கள் செல்வம் , மிகுந்த செல்வம் , எதிரிகள் இல்லாத நிலை , மரண பயமின்மை , தெய்வங்களின் அருள் போன்ற பேறுகள் கிடைத்து இறுதியில் மோட்ச நிலையை அடைவார்கள் .