ஶ்ரீகுரு பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திரபந்தம் - வரிகள்
சஸ்திர பந்தம் வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா மாலைபூ ணேமதிற மால்வலர்தே – சாலவ மாபாசம் போக மதிதேசார் மாபூதம் வாபாதந் தாவேல வா இந்தப் பாடலின் பொருள் , ` தூயவனே , வேதாந்த விலாசக் கடவுளே … பேரின்பமெனும் அனுபவத்திற்கு நாயகனே , மாலைகளை அணியும் செம்பொன்னெ னத் திகழ்பவனே , வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே … என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும் , பெரிய ஆணவாதி பந்தங்களும் ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க … திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க …’ என்பதாகும் .