ஶ்ரீகுரு பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திரபந்தம் - வரிகள்

 

சஸ்திர பந்தம்

 வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா

மாலைபூ ணேமதிற மால்வலர்தேசாலவ

மாபாசம் போக மதிதேசார் மாபூதம்

வாபாதந் தாவேல வா

 

இந்தப் பாடலின் பொருள், `தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளேபேரின்பமெனும் அனுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன்னெ னத் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனேஎன்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும் ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்கதிருவடிச் செல்வத்தைத் தந்தருள்க…’ என்பதாகும்.

கருத்துகள்