திருப்பஞ்சாக்கரப்பதிகம் - துஞ்சலும் துஞ்சல் - திருஞானசம்பந்தர்
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : மூன்றாம்-திருமுறை பண் : காந்தாரபஞ்சமம் துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும் நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும் வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற் றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே. 1 மந்திர நான்மறை யாகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க் கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே. 2 ஊனிலு யிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர் ஞானவி ளக்கினை யேற்றி நன்புலத் தேனைவ ழிதிறந் தேத்து வார்க்கிடர் ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே. 3 நல்லவர் தீயரெ னாது நச்சினர் செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ கொல்லந மன்தமர் கொண்டு போமிடத் தல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே. 4 கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத் தங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில் தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே. 5 தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினு...