இடுகைகள்

திருஞானசம்பந்தர் தேவாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திருப்பஞ்சாக்கரப்பதிகம் - துஞ்சலும் துஞ்சல் - திருஞானசம்பந்தர்

அ௫ளியவர் :  திருஞானசம்பந்தர் திருமுறை : மூன்றாம்-திருமுறை   பண் : காந்தாரபஞ்சமம் துஞ்சலுந் துஞ்சலி   லாத போழ்தினும் நெஞ்சக நைந்து   நினைமின் நாடொறும் வஞ்சகம் அற்றடி   வாழ்த்த வந்தகூற் றஞ்சவு தைத்தன   அஞ்செ ழுத்துமே.  1   மந்திர நான்மறை   யாகி வானவர் சிந்தையுள் நின்றவர்   தம்மை யாள்வன செந்தழல் ஓம்பிய   செம்மை வேதியர்க் கந்தியுள் மந்திரம்   அஞ்செ ழுத்துமே.  2   ஊனிலு யிர்ப்பை   ஒடுக்கி ஒண்சுடர் ஞானவி ளக்கினை   யேற்றி நன்புலத் தேனைவ ழிதிறந்   தேத்து வார்க்கிடர் ஆனகெ டுப்பன   அஞ்செ ழுத்துமே.  3   நல்லவர் தீயரெ   னாது நச்சினர் செல்லல் கெடச்சிவ   முத்தி காட்டுவ கொல்லந மன்தமர்   கொண்டு போமிடத் தல்லல்கெ டுப்பன   அஞ்செ ழுத்துமே.  4   கொங்கலர் வன்மதன்   வாளி யைந்தகத் தங்குள பூதமும்   அஞ்ச வைம்பொழில் தங்கர வின்படம்   அஞ்சுந் தம்முடை அங்கையில் ஐவிரல்   அஞ்செ ழுத்துமே.  5   தும்மல் இருமல்   தொடர்ந்த போழ்தினு...