சென்னிக்குளநகர்வாசன்... காவடிச்சிந்து

 

காவடிச்சிந்து

(அண்ணாமலை ரெட்டியார்)

 

சென்னி குளநகர் வாசன் - தமிழ்
                 தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்
செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை
                 தீரன்; அயில் வீரன்

 

வன்ன மயில்முரு கேசன், - குற
                 வள்ளி பதம்பணி நேசன் - உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற
                வாதே சொல்வன் மாதே!

 

கோபுரத் துத்தங்கத் தூவி, - தேவர்
              கோபுரத் துக்கப்பால் மேவி, - கண்கள்
கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு
              குலவும் புவி பலவும்

 

நூபுரத் துத்தொனி வெடிக்கும் - பத
             நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் - அங்கே
நுழைவாரிடு முழவோசைகள் திசைமாசுணம் இடியோ என
            நோக்கும் படி தாக்கும்

 

சந்நிதி யில்துஜஸ் தம்பம், - விண்ணில்
           தாவி வருகின்ற கும்பம் - எனும்
சலராசியை வடிவார்பல் கொடிசூடிய முடிமீதிலே
          தாங்கும்; உயர்ந் தோங்கும்.

 

உன்னத மாகிய இஞ்சி,-பொன்னாட்டு
          உம்பர் நகருக்கு மிஞ்சி - மிக
உயர்வானது பெறலால், அதில் அதிசீதள புயல்சாலவும்
          உறங்கும்; மின்னிக் கறங்கும்

 

அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
        அந்தத் திருப்புகழ் முழக்கம், -பல
அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி
       அடைக்கும்; அண்டம் உடைக்கும்.

 

கருணை முருகனைப் போற்றித்-தங்கக்
       காவடி தோளின்மேல் ஏற்றிக் - கொழும்
கனல்ஏறிய மெழுகாய்வரு பவர் ஏவரும், இகமேகதி
       காண்பார்; இன்பம் பூண்பார்.

 

கருத்துகள்